பொதுவாக கருத்துருவாக்கம் என்பது எப்படி நிகழ்கிறது என்பதை நன்கு ஆழமாக படிக்க வேண்டும். பொதுவாக, இன்ன மனிதர் அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதர் கொள்கையில் உறுதியுள்ளவராக ஒரு கருத்தை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும். அவர், அதற்கு அறிவார்ந்த விளக்கங்களை ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். அவர் தனக்கு தெரிந்தவற்றை ஆய்வின் அடிப்படையில் விலாவரியாக மறுமறுபடி வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால், அவருக்கு ஆரம்பத்தில் குறைந்த மக்கள்தான் கிடைப்பார்கள். அந்த வாசகர்களின் எண்ணிக்கையை பற்றி அவர் கவலைப்படக்கூடாது. ஆனால், அவர்கள் விசுவாசமானவர்களா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். அல்லது அந்த கருத்தை ஆமோதித்தால், அந்த கருத்தை எவ்வளவு தூரம் அவர்கள் எடுத்து சொல்வார்கள், எவ்வளவு சக்திமிக்க பொஷிசனில் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் பள்ளிப்புத்தகம், பொதுமக்கள் படிக்கும் தினசரி பத்திரிகை போன்றவை மாஸ் ஊடகங்கள்தான். ஆனால், அதற்கு என்ன வலிமை இருக்கிறது? மாசுக்கு என்று ஆழம் கிடையாது. ஆழமாக இருந்தால், மாஸ் என்ற தன்மையை அல்லது மாஸ் மக்களை ஈர்க்கும் விசையை அது இழந்து விடுக...